Saturday, January 26, 2013

லூயி ப்ரெய்லி-ப்ரெய்லி முறை உருவான வரலாறு

நாம் இன்று அனுபவித்து வரும் ஒவ்வொரு சௌகரியமும் வசதியும் எத்தனையோ ஆத்மாக்களின் அயராத உழைப்பினாலும், விடாமுயற்சியினாலும் நமக்கு கிடைத்தவை. தமக்கு ஏற்பட்ட  துன்பங்களுக்கும் தடைகளுக்கும் விதியின் மீது பழிபோடாது மதியை பயன்படுத்தி அந்த உத்தமர்கள் வாழ்ந்து காட்டியதாலேயே நாம் இன்று சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 
லூயி ப்ரெய்லி(Louis Braille):

பார்வையற்றவகளால் படிக்கவே முடியாது என்று முன்பெல்லாம் நம்பிக்கொண்டிருந்தார்கள். படிக்கவேண்டும் என்றால் வார்த்தைகளை விழியால் பார்ப்பதால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலை இருந்தது. அந்த நிலையை மாற்றி, விழியிழந்தவர்களாலும் படிக்க முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியவர் லூயி ப்ரெய்லி.
பிரான்ஸை சேர்ந்த இந்த சிறுவன் மூன்று வயதிலிருந்தே பார்வையற்றவன். ஆனால் படிக்கவேண்டும் என்பதில் அலாதி ஆர்வம் கொண்டவன். பார்வையில்லை என்ற ஒரே ஒரு காரணத்தினால் தமது திறமையும் தமது அறிவும் பூட்டி வைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தான் அவன். இதற்க்கு விடை கண்டுபிடித்தே தீருவது என்று அவன் தீவிர தேடலில் இறங்கியபோது கண்டுபிடித்தது தான் இன்று உலகம் முழுதும் பார்வையற்றவர்கள் படிப்பதற்கு வழி(விழி)காட்டியாக திகழும் ‘ப்ரெய்லி எழுத்து முறை.
1809 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி ஃபிரான்ஸ் நாட்டில் பாரிஸ் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தான் ப்ரெய்லி. குதிரையை ஓட்ட பயன்படும் பெல்ட்டுகள் மற்றும் இதர தோல் பொருட்களை செய்வதில் அவர் தந்தை மிகவும் எக்ஸ்பர்ட். ‘தனது பட்டறையில் அது போன்ற பணிகளுக்கு லெதரில் துளையிடுவதற்கு மிகவும் கூரிய கருவிகளை பயன்படுத்துவார்.  குத்தூசியும் அதில் ஒன்று. குழந்தை ப்ரெய்லி அவன் தந்தையின் கருவிகளை வைத்து விளையாடும்போது குத்தூசி தவறி அவன் கண் மீது விழுந்துவிட்டது. ஆரம்பத்தில் ஒன்றும் பெரிதாக இல்லை. ஆனால் அடுத்த சில நாட்களில் கண்ணில் புண் ஏற்பட்டு செப்டிக் ஆகிவிட, அந்த கண்ணில் பார்வை பறிபோனது. நாளாவட்டத்தில் இன்பெக்ஷன் மற்ற கண்ணிற்கும் பரவி அந்த கண்ணிலும் பார்வை பறிபோனது. ஐந்து வயதாகும்போது ப்ரெய்லிக்கு இரு கண்ணிலும் பார்வை கிடையாது.
இரண்டு கண்ணிலும் பார்வையின்றி இருப்பது ஆரம்பத்தில் அவனுக்கு கஷ்டமாக இருந்தாலும் போகப் போக பழகிவிட்டது. பார்வை இல்லையென்றாலும் மற்றவர்களை போல நார்மலாக வாழ பழகிக்கொண்டான்.
பள்ளி செல்வதை அவன் நிறுத்தவில்லை. எந்த வித தயக்கமும் இன்றி பள்ளி சென்றான். பள்ளியில் அவன் தான் நம்பர் ஒன் ஸ்டூடன்ட். படிப்பில் படு கெட்டி. தன்னுடைய பார்வை குறைபாடு தன்னுடைய லட்சியத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ எந்தவிதத்திலும் தடையாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.
ஆனால் தான் படித்த பள்ளியில் உள்ள வசதிகள் மற்றும் சௌகரியங்கள் (INFRASTRUCTURE) தன்னுடைய லட்சியத்திற்கு துணை செய்யும் வகையில் இல்லை என்பதை உணர்ந்தான். பாரீஸ் நகரில் பார்வையற்றோர்களுக்கென்றே ஒரு சிறப்பு பள்ளியிருப்பதை பற்றி கேள்விப்பட்டான். பிறகு அவன் சிறிது கூட யோசிக்கவில்லை. அந்தப் பள்ளியில் சென்று சேர்வதே அவன் முதல் வேலையாக இருந்தது.
பள்ளியில், பார்வையற்றோருக்கான சிறப்பு புத்தகங்கள் இருக்கிறதா என்று கேட்டான். இருக்கிறது என்றார்கள் ஆனால் அந்த புத்தகங்கள் பயனற்றவைகளாக இருந்தன. எழுத்துக்கள் புத்தகத்திலிருந்து அதிகளவு புடைத்துக்கொண்டிருந்தன. ஆகையால் புத்தகம் மிக மிக தடிமனாக இருந்தது. தவிர விலை வேறு அதிகமாக இருந்தது. நிச்சயம் அதை சாமானியர்களால் வாங்க முடியாது. மொத்தம் 14 புத்தகங்கள் தான் அந்தப் பள்ளியிலேயே இருந்தன.
அந்த 14 புத்தகங்களையும் பள்ளியின் லைப்ரரியில் இருந்து வாங்கி ஒரே மூச்சில் படித்துமுடித்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு உட்கார்ந்துவிட்டான் லூயி. தொடுதல் உணர்ச்சி மூலம் ஒவ்வொரு வார்த்தையும் அவனால் படிக்க முடிந்தது. ஆனால் அது மிகவும் கடினமாக இருந்தது. ஒரு வாக்கியத்தை படித்துவிட்டு அடுத்ததற்கு வரும்போது முன்பு படித்த வாக்கியம் மறந்துவிடும். நிச்சயம் இதை விட மிகச் சிறப்பான வழி வேறு ஏதாவது இருக்கும் என்று அவனுக்கு தோன்றியது.
பார்வையற்றோர் படிப்பதற்கு சிரமப்படக்கூடாது. பார்வையுள்ளவர்கள் எப்படி படிக்கிறோமோ அதே போன்று தொடுதல் உணர்ச்சி மூலம் அதிகம் படிக்க வேண்டும் என்று விரும்பினான். அன்று முதல் பார்வையற்றோர் படிப்பதற்கு நிச்சயம் ஏதாவது ஒரு எளிமையான வழிமுறையை கண்டுபிடித்துவிட வேண்டும் என்று உறுதி பூண்டான்.
தற்போது லூயி ஒரு முழு கிரியேட்டிவ் மனிதனாக மாறியிருந்தான். இசையின் மீது ஆர்வம் ஏற்பட்டு இசைக்கருவிகளை வாசிப்பதில் நிபுணத்துவம் பெற்றான். சர்ச் மற்றும் நிகழ்ச்சிகளில் அதை வாசித்து அதன் மூலம் பொருளீட்ட தொடங்கினான். தன்னுடைய சாதுர்யமும், கிரியேட்டிவிட்டியும் அவனுக்கு தெரியும். அவனுடைய இசையார்வம் வேறு அவனை ஒரு பண்பட்ட மனிதனாக மாற்றியிருந்தது.
ஒரு நாள் அவனது திறமையை நிரூபிப்பதற்கு அவனுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. ராணுவத்தில் உள்ளவர்கள் பயன்படுத்தும் கோடிங் சிஸ்டம் பற்றிய அவனுக்கு தெரிய வந்தது. ராணுவத் தகவல்கள் ரகசியமாதளால், பேப்பரிலோ அல்லது வேறு எதிலுமோ எழுத மாட்டார்கள். பேர்ப்பரில் துளையிட்டு, பின்னர் அந்த துளையை தடவி பார்ப்பார்கள். மிகப்  நூல்களை தடவி பார்ப்பதைவிட இது லூயிக்கு மிக சுலபமாக இருந்தது. ஆனாலும் இந்த வழிமுறை மிகவும் தாமதமாக இருந்தது. ஒரு பக்கத்தில் அதிகபட்சம் இரண்டு வாக்கியங்களை மட்டுமே துளையிட முடிந்தது. தன்னால் இதை மேலும் எளிமையாக்கி படிக்கும் முறையை இன்னும் இலகுவாக்க முடியும் என்பதில் லூயிக்கு நம்பிக்கை இருந்தது.
விடுமுறைக்காக ஊருக்கு செல்லும்போதெல்லாம் இது குறித்து ஆராய்ச்சியிலேயே செலவழித்தான் லூயி. பெற்றோர்களும் அவனை அன்பாக கவனித்துக்கொண்டார்கள்.
ஒரு நாள் வழக்கம்போல தனது தந்தையின் பட்டறையில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது கையில் குத்தூசி தட்டப்பட்டது. “ஆஹா… என் பார்வையை பறித்த அதே குத்தூசி” என்று எண்ணிக்கொண்டான். அடுத்த வினாடி அவன் மனதில் மின்னலென தோன்றியது ஒரு யோசனை. ஏன் இந்த குத்தூசியை பயன்படுத்தி சிறிய துளைகளை எழுப்பி அதை வைத்து படிக்கக்கூடாது?
அடுத்த சில நாட்களில் இரவு பகலாக உழைத்து துளைகளை அடிப்படையாக கொண்ட உயிரெழுத்துக்களை  கண்டுபிடித்தான். துளைகள் ஒன்றுக்கொன்று இடம் மாறும். ஆனால் அது தான் அந்த குறிப்பிட்ட எழுத்தை குறிக்கும்.
கடைசீயில் அந்த குத்தூசியை வைத்தே முதல் ப்ரெய்லி வாக்கியத்தை உருவாக்கினான் லூயி.
இது தான் இன்று உலகம் முழுதும் உள்ள கோடிக்கணக்கான பார்வையற்றோர் பயன்படுத்தும் ப்ரெய்லி முறை உருவான வரலாறு.
லூயி ப்ரெய்லியின் பார்வையை இறைவன் பறித்து கொன்டாலும் அவர் மூலம் இன்று எண்ணற்ற பார்வையற்றோர் படிப்பதற்கு ஒரு வித்தை ஊன்றினான். இப்படி எவரோ ஒருவருக்கு இறைவன் தரும் துன்பமும் சோதனையுமே பின்னாளில் உலகம் போற்றும் சாதனையாக மாறுகிறது. சரித்திரத்தில் இடம்பெறுகிறது.
இப்படி எவரோ ஒருவருக்கு இறைவன் தரும் துன்பமும் சோதனையுமே பின்னாளில் உலகம் போற்றும் சாதனையாக மாறுகிறது. சரித்திரத்தில் இடம்பெறுகிறது.
லூயி நமக்கு விடுக்கும் செய்தி இது தான்:
1) மாபெரும் சாதனைகள் சாதிக்கப்பட்டவை வலிமையினால் அல்ல. விடாமுயற்சியினால்.
2) எது உன்னுடைய பலவீனம் என்று நினைக்கிறாயோ அதையே உன்னால் பலமாக மாற்ற முடியு

Thursday, January 24, 2013

நவராத்திரி கொலு பொம்மையின் தத்துவம்



ஒரு காலத்தில் தன் எதிரிகளை அழிப்பதற்காக மகாராஜா சுரதா, தன் குரு
சுமதாவின் ஆலோசனையைக் கேட்டார். குரு கூறியபடி தூய்மையான ஆற்றுக்களிமண்ணைக் கொண்டு, காளி ரூபத்தைச் செய்து, அதை ஆவாஹனம் செய்து,உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை வேண்டினான். 

அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து, பின் ஒரு புதுயுகத்தையே உண்டு பண்ணினான். "ஐம்பூதத்தில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், நான் பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்...' என்று, தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளபடி, சுரதா மகாராஜா செயல்பட்டதால், அவன் பகைவர்களை எளிதில் வீழ்த்தி, அவர்களின் இன்னல்களிலிருந்து விடுதலை பெற்றான். 

எனவே, அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்வது, நவராத்திரியில், குறிப்பாக சரஸ்வதி பூஜை வழிபாட்டின் முக்கிய அங்கம் பெறுகிறது. மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க
வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள்
அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. 


ஒன்பது படிகள் அமைப்பது மரபு. ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும்.

1வது படி - ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, மர பொம்மைகள்)

2வது படி - இரண்டறிவு உயிரினம் (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்)

3வது படி - மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்)

4வது படி - நான்கறிவு உயிரினம் (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்)

5வது படி - ஐந்தறிவு உயிரினம் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்)

6வது படி - ஆறறிவு உயிரினம் (மனித பொம்மைகள்)

7வது படி - மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள்.

8வது படி - தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்கள்

.9வது படி - பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், விநாயகக் கடவுளர்.

இம்முறைப்படி கொலு வைத்து, முப்பெரும் தேவியரை வணங்கி வரும் போது கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் நம்மிடம் செழித்தோங்கும்.

கொலுபடி தத்துவம் !

கொலுவில் கீழேயுள்ள மூன்று படிகளில் வைக்கப்படும் அரிசி, பருப்பு,
பாத்திரம் போன்றவை, தாமச குணத்தைக் குறிக்கும்; 


அடுத்த மூன்று படிகளில் வைக்கப்படும் அரசர், ராணி, மந்திரி போன்றவை, ரஜோ குணத்தைக் காட்டும்;

மற்ற மூன்று படிகளில் வைக்கப்படும் தெய்வ உருவங்கள் சத்வ குணத்தை அடையும் வழியை நமக்குக் காட்டுகின்றன.
***
சரஸ்வதி வழிபாட்டின் பலன்!

வேதங்களில் முக்கியமாகப் போற்றப்படும் சரஸ்வதி யாகத்தைக் காப்பவள்.
அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றை அளிப்பவள். இனிய
வாழ்க்கையைக் கொடுப்பவள். யாகத்தின் இறுதியில் கூறப்படும், "சுவாகா' என்ற பதம் சரஸ்வதியைக் குறிக்கும். வீடுகளில் சரஸ்வதியை வழிபட்டால் இன்பம் பெருகும். ***


நங்கையருக்கு நலம் தரும் நவராத்திரி!

சக்தியை சித்திரை மாதத்தில் வழிபடுவது, "வசந்த நவராத்திரி!' புரட்டாசி
மாதத்தில் வழிபடுவது, "பாத்ரபத நவராத்திரி' அல்லது "சாரதா நவராத்திரி.
சாரதா நவராத்திரியை கொண்டாடுவது எல்லாருக்கும் சிறப்பு   தரும்.


நவராத்திரி வழிபாட்டால் கன்னிப் பெண்கள் திருமண பாக்கியம் பெறுவர். சுமங்கலி பெண்கள் பெறுவது மாங்கல்ய அனுகூலம். 
மூத்த சுமங்கலிப் பெண்கள் மகிழ்ச்சி, மன நிறைவு, திருப்தி பெறுவர். 

புரட்டாசி மாத வளர்பிறை பிரதமையில் தொடங்கி, விஜயதசமியில் முடிகிறது. பத்து நாட்கள் கொண்டாடப்படுவதால், "தசரா' என்று
அழைக்கின்றனர். 


நவதுர்க்கை



வன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ
துர்க்கை, ஜூவாலா துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை, தீப
துர்க்கை, ஆகரி துர்க்கை, லவண துர்க்கை. இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.


அஷ்டலட்சுமி: 

ஆதிலட்சுமி, மகாலட்சுமி, தனலட்சுமி, தானிய லட்சுமி,
சந்தானலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி, கஜலட்சுமி. இவை லட்சுமியின்
அம்சங்கம்.

அஷ்ட சரஸ்வதி: 


வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீத்தீஸ்வரி, அந்தரிட்ச
சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கிளி சரஸ்வதி. இவர்கள் சரஸ்வதியின் அம்சங்கள். 


உலகம் சக்தி மயமானது என்பதை விளக்குவதே நவராத்திரியின் உன்னத
தத்துவம். அனைத்து உருவங்களிலும், எல்லா இடங்களிலும் தேவி வியாபித்து இருக்கிறாள் என்பதை குறிக்கும் விதமாகவே கொலு வைத்து வணங்குகிறோம்.


விரதம் இருக்கும் பக்தர்கள் (பெண்கள்) அன்னையை பல வேடங்கள் புனைந்து வழிபாடு செய்கின்றனர்.

Wednesday, January 23, 2013

நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்



 
  மகாத்மா காந்தியடிகள் 
 

“ நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் ” இப்படி சொன்னவர் யார் தெரியுமா...? நம் தேச தந்தை காந்தியடிகள்...!

மகாத்மா காந்தியடிகள், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் 'தம்மைத் துன்புறுத்து வோரையும் தண்டிக்காது மன்னிக்கும் குணம் பற்றித் தாங்கள் கூறியிருக்கும் செய்தி, என்னை மிகவும் கவர்ந்தது' என்று குறிப்பிட்டார். 

லியோ டால்ஸ்டாய்

கடிதத்தைப் படித்த லியோ டால்ஸ்டாய் மிகுந்த தன்னடக்கத்தோடு, 'இந்தப் பெருமையும், புகழும் எனக்கு உகந்ததல்ல. உங்கள் தேசத்தில், தமிழ்நாட்டில் பிறந்து, திருக்குறள் எனும் அற்புத நூலைப் படைத்த திருவள்ளு வரையே சாரும். இதோ, அப்பொருள் உணர்த்தும் குறள்' என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளைக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் குறள்...

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்து விடல்.

இந்நிகழ்வுக்குப் பின், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை காந்தி படித்தார். பின், 'நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும். ஏன் தெரியுமா? ஆங்கிலத்தில் படிக்கும்போதே... இத்தனை சுவையாக இருக்கிற திருக்குறளின் மூலநூலை தமிழ்மொழியில் படிக்க வேண்டும். அதற்காகவே, நான் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்' என்றார்.

தமிழனாய் பிறந்ததில் கர்வம் கொள்வோம்...!

Monday, January 14, 2013

பொங்கல் திருவிழா

படிமம்:Preparation of Pongal.jpg

தைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடுஇலங்கை,மலேசியாசிங்கப்பூர்ஐரோப்பிய நாடுகள்வட அமெரிக்காதென் ஆப்பிரிக்காமொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.


நான்கு நாள் திருவிழா
பொங்கல் விழா நான்கு நாள் கொண்டாட்டம் ஆகும்.

[தொகு]போகி  

  மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.


  • போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.

தைப்பொங்கல்

தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம்இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டுமுற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலைவாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். 
இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர். 
மாட்டுப் பொங்கல்

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு.
 'பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

இந்தியாவின் வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது. பகலவன்/பரிதி தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன்/பரிதி சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவே தான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர்.


காணும் பொங்கல்

இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாள் இடம்பெறும்.


Source:http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D


பொங்கல் வாழ்த்துக்கள் 




பொங்கலுக்கு ஸ்பெஷலே சர்க்கரை பொங்கல்
வாங்க… தித்திக்கும் சர்க்கரை பொங்கல் செய்து பழகலாம்..!
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1/2 கிலோ
பாசிப்பருப்பு – 50 கிராம் (ஊற வைத்து கழுவியது)
பால் – 3/4 லிட்டர்
முந்திரி – 10
உலர் திராட்சை – 10
வெல்லம் – 600 கிராம் (பொடி செய்து கொள்ளவும்)
நெய் – 150 கிராம்
பச்சை கற்பூரம் – 1 சிறிய கட்டி (பொடி செய்து கொள்ளவும்)
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் அரிசியை நீரில் ஊற வைத்து, பின் கழுவிய நீரை தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு மண் பானை அல்லது பொங்கல் வைப்பதற்கான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் அரிசி கழுவிய நீரை பாத்திரம் முழுவதும் நிரப்ப வேண்டும்.
பாலானது நன்கு கொதித்து, பொங்கி வரும் போது, அதிலிருந்து சிறிது நீரை எடுத்து விட்டு, பிறகு அரிசி மற்றும் பாசிப்பருப்பை போட்டு, நன்கு கிளற வேண்டும்.
அதே சமயம் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு, வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அரிசியானது வெந்ததும், அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, உலர் திராட்சை மற்றும் சற்று தாராளமாக நெய் ஊற்றி பிரட்டி, பின் பொடி செய்து வைத்துள்ள வெல்லத்தை போட்டு, நன்கு கிளற வேண்டும்.
வெல்லம் கரைந்ததும், அதில் ஏலக்காய் பொடி மற்றும் பச்சை கற்பூரத்தை போட்டு ஒரு முறை கிளறி இறக்கி விட வேண்டும்.
sweet pongal
இப்போது சுவையான சர்க்கரைப் பொங்கல் ரெடி!!!
குறிப்பு : பொங்கலை மண்பானையில் செய்தால், அதன் சுவைக்கு அளவே இருக்காது. எனவே முடிந்தவரை மண்பானையில் செய்யவும்.
சுவையான வெண் பொங்கல்:
தேவையான பொருட்கள் பொன்னி அரிசி – கால்கிலோ பாசிப்பருப்பு பருப்பு – 100 கிராம் இஞ்சி, பூண்டு நறுக்கியது – 2 டீ ஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை சீரகம் - 1 டீ ஸ்பூன் மிளகு - 1 டீ ஸ்பூன் நெய் - 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது முந்திரிப்பருப்பு - 10 உப்பு – தேவைக்கேற்ப வெண்பொங்கல் செய்முறை அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து 20 நிமிடம் ஊறவைக்கவும். நன்றாகக் கழுவி விட்டு மூன்று மடங்கு தண்ணீரைச் சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய இஞ்சி, பூண்டு, உப்பு, பெருங்காயத்தூளையும் சேர்த்து, குக்கரில் வைத்து 3 முதல் 4 விசில் வரும் வரை குழைய வேகவிடவும். குக்கரின் ஆவி அடங்கியதும், மூடியைத் திறந்து, ஒரு கரண்டியால் நன்றாக மசித்து விடவும். ஒரு சிறு வாணலியில் நெய்யை விட்டு சூடானதும், முந்திரிப் பருப்பு, பொடித்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, சேர்த்து வதக்கி, மசித்து வைத்துள்ளப் பொங்கலில் கொட்டவும். நன்றாக கிளறினால் சுவையான பொங்கல் தயார்.
தமிழ் சினிமாவில் பொங்கல் கொண்டாட்டம் :



[தொகு]

Friday, January 4, 2013

சாப்ட்வேர் கம்பெனிகளில் முன்னேறுவது எப்படி??



Software Engineers மொத்தம் ரெண்டு வகை, 

காலைல 8 மணிக்கு ஆபீஸ் வந்துட்டு switch போட்ட grinder மாதிரி, night வரைக்கும் உக்காந்து எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சுட்டு ,work pressureனு வீட்ல போய் அம்மா,அப்பா,பொண்டாட்டி கூட சண்ட போட்டுட்டு படுத்து தூங்கறவங்க மொத கோஷ்டி.இவங்க, அவங்களா உழைச்சு , increment வாங்கி , onsite போய், சம்பாரிச்சு, மண்டைல முடி கொ.
..ட்டி, கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிருவாங்க.... இவங்களுக்கு நம்ம அட்வைஸ் ஏதும் தேவை இல்ல....

ரெண்டாவது கோஷ்டி:
வேல செய்ய புடிக்காம, கடுப்புல வந்து, ஏனோ தானோன்னு வேல செஞ்சு, increment இல்லாம,onsite இல்லாம, வீட்ல, 'சாப்பாட்ல உப்பு இல்லன்னு' சொன்னா,' PCS/Cunfosys/GTS/JCLல தான வேல செய்யற??' ன்னு நக்கல் பேச்சுக்கு ஆள் ஆகி,தினமும் Managerகிட்ட 'You have to put some extra efforts man'ன்னு பேச்சு வாங்கிட்டு இருக்கற 73% பேரு....


இவங்கல்லாம் கஷ்டப்பட்டு வேல செய்யாமலே முன்னேறரதுக்கு எளிய வழிகள்:

*.காலைல மேனேஜர் office போறதுக்கு முன்னாடி நம்ம போயரனும்,Evening அவர் கெளம்புனதுக்கு அப்புறம் தான் நம்ம கெளம்பனும்(அந்த timeல வேல செய்யனும்கறது முக்கியம் இல்ல....).....

*. 5 mins வேலையா இருந்தாலும், பெருசா build up பண்ணனும்,
For example,
உங்க lead சின்னதா excel sheetla ஒரு fieldla ஏதாவது change பண்ண சொன்னாங்கன்னா, அந்த வேலைய செஞ்சு முடிச்சிட்டு,

Hi Ramesh,

As discussed with you yesterday evening over phone, I have successfully changed 3rd row, 4th column of the 'employee details' excel sheet.
Please find the updated excel sheet in the following folder path,

<<folder path/file name>>

Please reply back for any clarifications

Thank you,
XXXXXXXXXXXXXX,
Software Analyst,
YYYY Consultancy Solutions,
Chennai.

அப்படின்னு 5 நிமிஷ வேலைக்கு 15 நிமிஷம் செலவு பண்ணி மெயில் போடணும்....Team members, module lead, group lead, project manager எல்லார்த்தையும் CCல வெக்கணும்....

* .birthday celebrations, Team outingநா, மூஞ்சில cake பூசறது , photo எடுக்கும்போது கொம்பு வெக்கறது , அப்பப்ப ரெண்டு மூணு மொக்கைய போடறதுன்னு நல்லா 'performance' பண்ணனும்....


*Managera எதிர்த்து பேசவே கூடாது, manager சொன்னா ஒன்னும் ஒன்னும் மூணு....

* தெரியாம கூட , 'தெரியாது' ங்கற வார்த்தைய சொல்லிரவே கூடாது. சுத்தமா தெரியாத ஒரு tool, software அல்லது technology பத்தி manager/lead கேட்டா கூட ,
Its a kind of,Its a sort of, In the sense, usability, modularity, quality, technically speaking , cost cutting, probably, actually இந்த மாதிரி வார்த்தைகள போட்டு, ஒரு statement குடுத்தரனும்...

*.Client visit வந்தா, clientsஓட நல்லா interact பண்ணனும்.
What do you think about Indian culture?,
Which one u like most, Dosa or Chappathi?
What will be the future of Indian Software Engineers?(அங்க Eurozone crisis வந்து, கொஞ்ச நாள்ல அவன் futureருக்கே வழியில்லன்னு தெரிஞ்சிருந்தாலும் பரவால்ல....)
இந்த மாதிரி மொக்கத்தனமான கேள்வியெல்லாம் கேக்கணும்....

*. அப்பப்ப sweets எடுத்துட்டு வரணும்,

Hi All,
Sweets at my desk, Please help yourselves,

அப்டின்னு mail போட்டு எல்லார்த்துக்கும் குடுக்கணும்....இப்படி டகில்பாஸ் வேல செஞ்சாதான் நம்மளோட managerஉக்கு நம்மளோட teamwork தெரியும்.

இது போக அப்பப்ப யாருக்காவது ஏதாவது சொல்லிக்குடுக்கனும் (எல்லார்த்துக்கும் தெரியுற மாதிரி சத்தமா ), Juniorsக்கு அட்வைஸ் பண்ணனும் ,Team movie போனா ticket book பண்ணனும் ,cab book பண்ணனும், Clean shave, formalsனு Raymonds model மாதிரி சுத்தனும்.

இப்படி மேல சொன்ன வேலையெல்லாம் செஞ்சா , Software fieldல முன்னேறி, onsite போயி, சம்பாரிச்சு கல்யாணம் பண்ணி, ஊற தாண்டி ஊரப்பாக்கத்துல ஒரு இடம் வாங்கி settle ஆயிறலாம்....

(இணையத்தில் படித்து ரசித்தது)