Sunday, June 25, 2017

16 செல்வங்களும் அவைகளைப் பெரும் வழிகளும்!

Image result for 16 செல்வங்களும் அவைகளைப் பெரும் வழிகளும்!
இதோ 16 வகையான செல்வங்கள் 
1. புகழ் 
2. வெற்றி 
3. பணம் (பொன்), 
4. இரக்கம்
5. அறிவு 
6. அழகு 
7. கல்வி 
8. நோயின்மை 
9. வலிமை 
10. நல்விதி 
11. உணவு 
12. நன் மக்கள் 
13. பெருமை 
14. இனிமை 
15. துணிவு 
16. நீண்ட ஆயுள்
16 செல்வங்களைப் பெரும் வழிகள் 

1. புகழ் :

யாரும் புகழோடு தோன்றுவதில்லை. 
செய்யும் செயலிலும், நடக்கும் விதங்களிலும், 
நன்னடத்தை மற்றும் உதவி மனப்பான்மையான
 குணங்களைப் பொறுத்து தான் புகழ் கிடைக்கும்.

2. வெற்றி 

 வெற்றி என்பது பிறரை தோற்கடித்து 
நாம் வெற்றி பெறுவது அல்ல. 
நம்மை நாமே வெற்றி கொள்வதாகும். 
இன்றைய நிலையை விட நாளைய 
நிலைமை உயர்த்துவதற்கு கடின உழைப்பும்,
 விடாமுயற்சியும் மேற்கொள்ளுதல் வேண்டும்.

3. பணம் (பொன்)

செழிப்பான வாழ்க்கைக்குத் தேவையானவைகளில்
 பணமும், பொன்னும் ஆகும்.
அவற்றைப் பெறுவதற்குச் சிறந்த வழிகள் 
தொழில் செய்வது அல்லது 
நல்ல வேலைக்குச் சென்று சம்பாதிப்பது.
4. இரக்கம் 
 இருப்பவர்களுக்கு கொடுக்கிற மனமில்லை. மனமிருப்பவர்களுக்கோ கொடுப்பதற்கு ஏதுமில்லை. 
இது தான் இன்றைய நிலை. 
அன்பு காட்டுவது, அரவணைப்பிற்கு கூட பணம் கேட்கும் காலம். இருப்பினும் வெகு சிலர் இரக்கம் காட்டி பல ஏழைகளுக்கு உதவி செய்து இறைவனைப்போல் தரிசனம் தந்து கொண்டிருக்கின்றனர்.
5. அறிவு 

 கல்வியும், அறிவும் வேறு வேறு என்று உணர வேண்டும். படித்துத் தெரிந்து கொள்வது கல்வி. அறிவோ பார்த்து, கேட்டு, அனுபவப்பட்டு வருவது. அறிவுடையோருக்கு கல்வி குறைவாக இருந்தாலும் எந்த நேரத்தில் என்ன செய்தால் வாழ்க்கை நன்றாக வாழ முடியும் என்பதில் அதிக அறிவு இருக்கும். 


6. அழகு 

 பார்த்தவுடன் கவருகின்ற தன்மையை அழகு என்று பெரும்பாலோர் எண்ணிக்கொண்டு சற்று கருப்பாக, குண்டாக இருப்பவர்கள் 'தாங்கள் அழகில்லையே' என்று தாழ்வு மனப்பான்மையோடு வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்குள் பலவகையான அழகுகள் இருப்பதை தெரிந்துகொண்டால் இந்த மாதிரி தாழ்வுமனப்பான்மை எண்ணங்கள் வரவே வராது.சில வகை அழகுகள் இதோ ! குரல் இனிமை, கவரும் பேச்சு, தாளம் போட வைக்கும் பாட்டு, நளினமான நடனம், உடை அழகு, அறிவு, அன்பு, கருணை காட்டுதல் இன்னும் பல. 


7. கல்வி 

 கல்வி பெரிதாக தேவைபடாவிட்டாலும் அடிப்படை கல்வி மிகமிக அவசியம். அதுவும் படித்து மனப்பாடம் செய்யும் ஏட்டுக் கல்வி வாழ்க்கை வாழ்வதற்கு உதவாது. அதோடு செய்முறை பயிற்சி வளமான துணையோடு கையும் கொடுக்கும். வளமான வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு கைத்தொழிலை கற்றுக்கொள்வது நல்லது.

8. நோயின்மை 

 நல்ல உணவு, சிந்தனை மற்றும் செயல் நோயற்ற வாழ்வுக்கு ஆணிவேராகும். 'நோயின்மை' ஒருவன் வாழ்நாளில் பெற்ற விலைமதிப்பில்லாத பொக்கிசமாகும். எங்கே நோய் இல்லையோ அங்கே மகிழ்ச்சி பொங்கி வழியும்.


9. வலிமை 
 உடல் வலிமை பெற உடற்பயிற்சியும், மனவலிமை பெற தியானம் மற்றும் தன்னம்பிக்கை வேண்டும். வலிமை பெற அதிக நேரம் செலவழிக்க வேண்டியதில்லை. வெறும் 5 முதல் 10 நிமிடங்களே போதுமானது.


10. நல்விதி

 நல்ல எண்ணமும், செயலும் நல்விதிக்கு அடிப்படை காரணமாக விளங்குகின்றது.'விதி' என்பது கஷ்டம் தருவது மட்டுமல்ல. நன்றாக மகிழ்ச்சியோடு இருப்பது கூட விதியாகும். ஆக விதி என்பது உன் கையில் தான் இருக்கின்றது. அதை நமக்கு சாதகமாக ஏற்படுத்திக்கொள்வது நமது புத்திசாலித்தனத்தில் இருக்கின்றது.


11. உணவு

 உடை, இருப்பிடம் முக்கியமானதாக இருந்தாலும் வேளா வேளைக்கு நல்ல உணவு உண்ணுவது அவசியம் வேண்டும். உணவு , உடலும் அருவும் வளர்வதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பதாகும். 


12. நன் மக்கள்

 பொதுவாக குழந்தையாக இருக்கும்போது சூது, வாது ஏதும் தெரிவதில்லை.தீ ஜுவாலை கூட கவர்ச்சி மிக்க பொருளாகத் தெரியும். தீ கங்கு கூட சாப்பிடும் பழமாகத் தெரியும். ஆனால் அவர்களை நன்மக்களாக வளர்ப்பது பெற்றோர் கையிலும், சிறந்தவர்களாக உருவாக்குவது ஆசிரியர்கள் கையிலும் , அவர்களை நன்றாக உபயோகித்துக் கொள்வது மக்கள் கைகளிலும் இருக்கின்றது.

13. பெருமை

 பிறர் பெருமைபட வாழ்தல் ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் சாதனையாகும். ஆனால் 'தற்பெருமை' என்பது அறவே விரும்பத் தகாததாகும். பெரும்பாலும் தற்பெருமை பேசுபவர்களைச் சுற்றிலும் ஒரு கூட்டம் வெறும் பணத்திற்காகவும், பதவிக்காகவும் வேறு பல எதிர்பார்ப்போடும் இருப்பார்கள். உண்மையான பெருமை என்பது சர்க்கரையைத் தேடி எறும்பு வருவது போல நல்ல செயல்களைச் செய்யும் போது பெருமை தானாக தேடி வரும்.


14. இனிமை

 பேச்சில் இனிமை, நன்மைக்களிடம் பழகுவதில் இனிமை, சொற்களில் இனிமை, எழுதுவதில் இனிமை ஆகியவைகள் என்றுமே நன்மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.


15. துணிவு
 துணிவு இல்லையேல் வெற்றி இல்லை. திட்டமிடுதல் துணிவுக்கு அடித்தளம். திட்டம் சரியாக இருந்தால் எந்த செயலையும் துணிவோடு செய்யலாம். வெற்றி பெறலாம். 


16. நீண்ட ஆயுள்

 மேற்கூறிய எல்லா (15) செல்வங்களை பெற்றுவிட்டால் நீண்ட ஆயுளுக்குத் துணையாய் இருக்கும்.
---------------------------------------------------------------

Wednesday, April 5, 2017

நீங்கள் வெற்றியாளரா... சுய பரிசோதனை செய்ய 12 வழிமுறைகள்!#SuccessTips

வெற்றி

நீங்கள் வெற்றியாளராதோல்வியாளராஇப்படி ஒரு கேள்வியை யாரும் விரும்ப மாட்டார்கள் என்பதே உண்மை. ஏனெனில்எல்லோருமே வெற்றிப்படியை எட்டிப் பிடிக்கவே ஆசைப்படுகிறோம். 

ஆனால்,வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் சில விஷயங்களில் வித்தியாசம் உண்டு. குறிப்பாக 12 விஷயங்களில்! அவற்றைத் தெரிந்துகொண்டுசரியான வழிமுறைகளக் கடைப்பிடித்தாலே போதும். நீங்களும் வெற்றியாளரே! அவை...
1.பிழைகள்:
வெற்றியாளர்: தன் மேலுள்ள தவறை பிறர் சுட்டிக்காட்டும்போது அதனை எதிர்க்க மாட்டார்; ஏற்றுக்கொண்டு அதைச் சரிசெய்துகொள்வதற்கான வழிமுறைகளை யோசிப்பார்.
தோல்வியாளர்: தன் தவறை மற்றவர் மீது சுமத்திவிட்டு, தான் எப்படித் தப்பிக்கலாம் என்று யோசிப்பார். தன்னுடைய தவறைத் திருத்திக்கொள்ள எந்த முயற்சியையும் மேற்கொள்ள மாட்டார்.
2.எண்ண ஓட்டம்:
வெற்றியாளர்: இயற்கையாகவே உறுதியான எண்ண ஓட்டத்தைக்கொண்டிருப்பார். தன் உணர்சிகளையும் கருத்துகளையும் நல்லெண்ண அடிப்படையிலேயே சிந்திப்பவர் இவர்.
தோல்வியாளர்: எப்போதும் எதிர்மறை எண்ணங்களோடு வலம் வருபவர் இவர். எந்தப் பிரச்னையையும் எதிர்மறைச் சிந்தனைகளுடனேயே அணுகுவார்.
3.பேச்சு:
வெற்றியாளர்: அடிமட்ட அளவுக்கு இறங்கி, பிறரை இழிவாகப் பேச மாட்டார். புதுப்புது விஷங்களை, சமூகப் பார்வைகளை, அவர்களது கருத்துக்களை திட்டமிட்டு விவாதிப்பார்; கலந்துரையாடுவார்.
தோல்வியாளர்: தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றி அல்லது ஏதாவது நிகழ்வுகளைப் பற்றி வீண் பேச்சுப் பேசுபவராக இருப்பார். புரளி பேசுவதையே பொழுதுபோக்காகக்கொண்டு செயல்படுவார்.
4.கருத்துகள்
வெற்றியாளர்: தன்னுடைய கருத்துகளை, வெற்றிகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்வார். பிறர் கூறும் அறிவுரைகளை நல்ல எண்ணத்துடன் ஏற்றுக்கொள்வார்.
தோல்வியாளர்: தன்னுடைய வெற்றிகளைக்கூடப் பிறரிடம் பகிர்ந்துகொள்ள மாட்டார். பிறரின் அறிவுரைகளை விரும்பவே மாட்டார்.
5.குணம்:
வெற்றியாளர்: தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் நல்ல செயல்களை மதிப்பார்; மனதாரப் பாராட்டுவார். அனைத்துத் தரப்பினரையும் உயர்வாக மதிக்கும் குணம்கொண்டவராக இருப்பார்.
தோல்வியாளர்: வெகு எளிதாக அனைவரையும் குறை கூறிவிடுவார்;அவர்களது வெற்றிகளையும் குறைகளாகவே சித்தரிப்பார்; எப்போதும் மற்றவர்களை மட்டம் தட்டிக்கொண்டே இருப்பார்.
6.மன்னிக்கும் மனப்பான்மை:
வெற்றியாளர்: தன்னைக் காயப்படுத்தியவர்களாகவே இருந்தாலும்,அவர்களையும் மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவர். அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வார். எதிரியையும் நண்பனைப்போல நேசிக்கும் பக்குவம்கொண்டவர்.
தோல்வியாளர்: தன் மனதை காயப்படுத்தியவர்களை வெறுத்து ஒதுக்குவார். அவர்களை தனது வாழ்கையில் இருந்தே முழுமையாக நீக்குவதற்கான வழிமுறைகளைச் செய்வார்.
7.பொது நலமும் சுயநலமும்:
வெற்றியாளர்: `எல்லாரும் வாழ்வில் வெற்றியடைய வேண்டும்; முன்னேற வேண்டும்’ என்கிற பொதுச் சிந்தனையோடு செயல்படுவார். எப்போதும் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளத் துடிப்பார் அதற்காகவே செயல்படுவார்.
தோல்வியாளர்: தனக்கு உதவியவர்கள்கூட வாழ்க்கையில் முன்னேறக் கூடாது என்கிற சுயநல எண்ணத்தோடு இருப்பார். `நான் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணம் இவருக்கு எப்போதும் தலைதூக்கி இருக்கும்.
8.புகழ்:
வெற்றியாளர்: அடுத்தவர் புகழையும் தன்னுடையதாக நினைத்துக் கொண்டாடுபவர். மற்றவர்களுக்குப் பேரும் புகழும் சென்றடைய வேண்டும் என எண்ணுபவர்.
தோல்வியாளர்: `புகழ் எனக்கு மட்டுமே உரித்தான ஒன்று. அதை எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்கிற சுயநலத்தோடு பயணிப்பவர். 
9.ஆபத்தை எதிர்கொள்ளும் விதம்:
வெற்றியாளர்: எந்தப் புது முயற்சியையும் எதிர்கொள்ளத் தயங்காதவர். ஆபத்தைக்கூட ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி பெறுவார்.
தோல்வியாளர்: புது முயற்சிகளைக் கையாள்வதற்கு அஞ்சுவார். முயற்சி செய்வதற்கு முன்னரே அதில் ஆபத்து வரும் என்று முடிவு செய்து, அதை மேற்கொள்ளாமலேயே கைவிட்டுவிடுவார்.
10.பகிர்தல்:
வெற்றியாளர்: தனக்குத் தோன்றும் கருத்துகளைப் பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லும் இயல்புடையவர். மனதுக்குள் எதையும் மறைத்து வைக்காமல், வெளிப்படையாகப் பேசுபவர்.
தோல்வியாளர்: உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர். எந்த விஷயத்தையும் பிறரிடம் வெளிப்படையாகச் சுட்டிக்காட்ட மாட்டார்.
11.கற்றுக்கொள்ளல்:
வெற்றியாளர்: புதுப்புது விஷயங்களையும், தனக்குத் தெரியாதவற்றையும் கற்றுக்கொண்டே இருப்பார். அன்றாடம் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே (Update) இருப்பார். சிறியவர், பெரியவர் என்கிற பேதமின்றி அனைவரிடமும் ஏதாவது ஒன்றைத் தேடிக் கற்றுக்கொள்வார்.
தோல்வியாளர்: `எல்லாம் எனக்குத் தெரியும்’ என்கிற மன நிலையோடு இருப்பார். எந்தப் புது விஷயத்தையும் கற்றுக்கொள்ள விரும்ப மாட்டார்.
12.வாழ்க்கைப் பாடங்கள் :
வெற்றியாளர்: அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வைக் கண்டறிந்து, அவற்றை எளிதாகக் கடந்து செல்பவராக இருப்பார். கடந்தபோன நாட்களை அதிகம் யோசிக்க மாட்டார். இன்றைய தினத்தை எப்படிநல்லபடியாகக் கழிக்க வேண்டும் என்பதை மட்டும் சிந்திப்பார்.
தோல்வியாளர்: கடந்தகால பிரச்னைகளை நினைத்து நினைத்தே இன்றையப் பொழுதையும் பிரச்னைகளுடனேயே கழிப்பார். அந்தப் பிரச்னைக்கான தீர்வைக் கண்டறிய முன்வர மாட்டார்.

நீங்கள் வெற்றியாளராதோல்வியாளரா

சுயபரிசோதனைக்கு உதவும் இந்த 12 வழிமுறைகளையும் எல்லோருமே அசைபோட்டுப் பார்க்கலாம்.

 இந்த வழிமுறைகள் பெரும்பான்மையானவர்களுக்குப் பொருந்தும். இவற்றை சுயபரிசோதனை செய்துஅதன் அடிப்படையில் உங்கள் செயல்பாடுகளை மாற்றிக்கொண்டால் போதும்... நிச்சயம்! நீங்களும் சாதனையாளராக வலம் வர முடியும்...

நன்றி                  
http://www.vikatan.com/news/health/82193-12-steps-to-self-analyze-whether-you-are-a-successful-person.html

Tuesday, April 4, 2017

வேர்கடலை கொழுப்பு அல்ல.! ஒரு மூலிகை!!

 Image result for groundnut
நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் பரப்பிவிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிறைந்துள்ள சத்துக்கள்:

100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

கார்போஹைட்ரேட்- 21 மி.கி. 
நார்சத்து- 9 மி.கி. 
கரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி. 
புரதம்- 25 மி.கி. 
ட்ரிப்டோபான்- 0.24 கி. 
திரியோனின் – 0.85 கி 
ஐசோலூசின் – 0.85 மி.கி. 
லூசின் – 1.625 மி.கி. 
லைசின் – 0.901 கி 
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி 
கிளைசின்- 1.512 கி 
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி 
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி. 
காப்பர் – 11.44 மி.கி. 
இரும்புச்சத்து – 4.58 மி.கி. 
மெக்னீசியம் – 168.00 மி.கி. 
மேங்கனீஸ் – 1.934 மி.கி. 
பாஸ்பரஸ் – 376.00 மி.கி. 
பொட்டாசியம் – 705.00 மி.கி. 
சோடியம் – 18.00 மி.கி. 
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி. 
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம். 
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.

கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம்:

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.

நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது.மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது . நாம் உண்ணும்உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். 

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்துநிறைந்துள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளைவளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும்.உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது.செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது.மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது
கொழுப்பை குறைக்கும்

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம்.ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும்நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை.மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். 

இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனைவாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.

கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில்நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. 

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம்,பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம்,இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தா ன் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.