Wednesday, November 20, 2013

சச்சின் டெண்டுல்கர்-இந்திய கிரிக்கெட்டின் இமயம்


பெயர்: சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்

பிறப்பு: ஏப்., 24, 1973

இடம்: மும்பை, மகாராஷ்டிரா

வயது: 40

உயரம்: 5 அடி, 5 அங்குலம்

இந்திய கிரிக்கெட்டின் இமயம் என போற்றப்படும் சச்சின், சுமார் 24 ஆண்டுகளாக மகத்தான பேட்ஸ்மேனாக பிரகாசித்தார். சர்வதேச போட்டிகளில் 100 சதங்கள், அனைத்து கிரிக்கெட்டிலும் சேர்த்து 50 ஆயிரம் ரன்கள் என சாதனை சிகரமாக விளங்கினார். மிக நீ...ண்ட காலமாக இந்திய ரசிகர்களின் இதயத் துடிப்பாக இருந்த இவரது ஓய்வு நிச்சயமாக மிகப் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தும்.

மும்பை-யில் கடந்த 1973ல் பிறந்த சச்சின், இளம் வயதிலேயே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார். இவரது அண்ணன் அஜித் கொடுத்த ஊக்கத்தில் தளராமல் பயிற்சியில் ஈடுபட்டார். ஷிரத்தாஸ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் படித்த போது தனது குரு ராம்காந்த் ஆச்ரேக்க-ரிடம் கிரிக்கெட் நுணுக்கங்களை கற்று தேர்ந்தார். 1988ல் நடந்த பள்ளிகளுக்கு இடையி-லான போட்டியில் சக நண்பர் வினோத் காம்ப்ளியுடன் சேர்ந்து 664 ரன்கள் சேர்த்து சாதனை பயணத்தை துவக்கினார். இதில் சச்சின் மட்டும் 326 ரன்கள் எடுக்க, இந்திய அணியில் வாய்ப்பு தேடி வந்தது.

முதல் சோதனை
தனது 16வது வயதில் 1989, நவ.,15ல் கராச்சி-யில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் அறிமுகமானார். முதல் போட்டியே சோதனையானதாக அமைந்தது. வக்கார் யூனிஸ் வீசிய பந்து இவரது முகத்தை பதம் பார்க்க... ரத்தம் வழிந்தது. இன்னொரு பக்கம் வாசிம் அக்ரமும் போட்டுத் தாக்கினார். முதல் இன்னிங்சில் வக்கார் வீசிய "யார்க்க-ரில்' வெறும் 15 ரன்க-ளுக்கு போல்டானார். இத்தொடர் முடிந்ததும், ""-அக்ரம் அசுர வேகத்தில் பந்துவீசுகிறார். சில சமயங்-ளில் தொடர்ந்து நான்கு பவுன்சர்கள் வீசுகிறார். இதை சமாளிப்பது ரொம்ப கடினமாக இருக்கிறது. டெஸ்ட் போட்டியில் இனி விளைடுவது பற்றி யோசித்து வருகிறேன், '' என்று சச்சின் பரிதாபமாக கூறினாராம். இந்த சோதனையில் இருந்து மிக விரைவாக மீண்ட இவர் தனது 17வது வயதில் இங்கி-லாந்துக்கு எதிராக முதல் சதம் கடந்தார். தொடர்ந்து "மாஸ்டர் பேட்ஸ்மே-க' பிரகாசித்து, டெஸ்டில் அதிக சதம், அதிக ரன் எடுத்து சாதனை படைத்தார்.

"கிரிக்கெட் கடவுள்':

பெரும்பாலான டெஸ்ட் போட்டிகளில் இவரை தான் இந்திய அணி பெரி-தும் நம்பியிருந்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் "ஹீரோவாக ஜொலித்தார். "இந்தியாவில் கிரிக்கெட் மதம் என்றால்; சச்சின் தான் கவுள்' என்று பேசப்படும் அளவுக்கு புகழின் உச்சியை தொட்டார். சிறுவர்களை பெரிதும் கவர்ந்ததால் இவரது பெய-ரில் "காமிக்ஸ்' புத்தகங்கள் கூட எழுதப்பட்டன. விளம்பரதாரர்களின் விருப்ப நாயகனாக இருந்ததால், உலகில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரராக மாறினார்.

கடந்த 24 ஆண்டுகளாக டெஸ்ட் அரங்கில் அசைக்க முடியாத வீரராக உலா வந்த சச்சின், தனது சொந்த ஊரான மும்பையில் 200வது டெஸ்ட் போட்டியுடன் பிரியாவிடைபெற்றார்.

சச்சினுக்கு பாரத ரத்னா :கிரிக்கெட் சேவைக்கு கவுரவம்


நாட்டின் மிக உயர்ந்த "பாரத ரத்னா' விருது சச்சினுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது பெறும் முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையை பெறுகிறார்.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. கடந்த 24 ஆண்டுகளாக விளையாடி வந்த இவர், சர்வதேச போட்டிகளில் 100 சதம் உட்பட பல்வேறு சாதனைகள் படைத்தவர்.

இவருக்கு "பாரத ரத்னா' விருது தரவேண்டும் என, கோரிக்கை கடந்த 2011ல் எழுந்தது. கடந்த 1954 முதல் வழங்கப்பட்டு வரும் இவ்விருது, விளையாட்டு தவிர, கலை, இலக்கியம், அரசியல் மற்றும் பொதுத் துறைகளில் சாதித்தவர்களுக்கு மட்டும் தரப்படும்.

விதிகளில் மாற்றம்:
ஆனால், சச்சினுக்காக விளையாட்டு வீரர்களும், இவ்விருதை பெறும் வகையில் சட்டத்தை மாற்ற வேண்டும் என, அப்போதைய விளையாட்டு அமைச்சர் அஜய் மேகன், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்தார். இதனால், "பாரத ரத்னா' விருது பெறுபவர்களுடைய தகுதியில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு, கடந்த 2011, டிசம்பர் மாதம் முன்வந்தது.

சச்சினுக்கு முன்:
இந்தியாவுக்காக மூன்று ஒலிம்பிக் போட்டியில், தங்கம் வென்ற ஹாக்கி வீரர், மறைந்த தியான்சந்த்துக்கு முதலில் பாரத ரத்னா விருது தர வேண்டும் என, ஹாக்கி இந்தியா (எச்.ஐ.,) சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. இதற்காக 82 எம்.பி.,க்கள் கையெழுத்திட்ட கோரிக்கையை, மத்திய அரசு நிராகரித்தது.

பலத்த போட்டி:
ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் முதல் தங்கம் (2008, பீஜிங்) வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு முதலில் வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
இப்படி பல்வேறு தரப்பில் இருந்தும் "பாரத ரத்னா' விருது கேட்டு, பிரதமர் அலுவலகத்துக்கு மொத்தம் 64 விண்ணப்பங்கள் வந்தன. இதனால், 2011, 2012ல் இவ்விருது யாருக்கும் தரப்படவில்லை.

இதனிடையே, கடந்த ஜூலையில் மத்திய விளையாட்டு அமைச்சர் ஜிதேந்திரா சிங், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்,"சச்சினுக்கு முன், ஹாக்கி வீரர் தியான்சந்த்துக்கு, "பாரத ரத்னா' தரவேண்டும்,' என, தெரிவித்தார்.

இவ்விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, மகாராஷ்டிரா முதல்வர் பிரிதிவிராஜ் சவுகான் உள்ளிட்ட பலர், சச்சினுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

சமீபத்தில் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,"" சச்சின் ஓய்வு பெற்றவுடன், "பாரத ரத்னா' விருது வழங்கப்படும்,'' என்றார். சச்சின் பெயரை , பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பரிந்துரை செய்தார்.

சச்சின் விடைபெற்ற சிறிது நேரத்தில், "பாரத ரத்னா' விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, விளையாட்டு உலகில் இருந்து இவ்விருது பெறும் முதல் வீரர் என்ற பெருமையை சச்சின் பெறுகிறார். பேராசிரியர் சி.என்.ஆர். ராவிற்கும் "பாரத ரத்னா' விருது வழங்கப்பட உள்ளது.

அம்மாவுக்கு அர்ப்பணம்
"பாரத ரத்னா' விருதை, தனது அம்மாவுக்கு அர்ப்பணம் செய்த சச்சின் கூறுகையில்,"" பாரத ரத்னா விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. இவ்விருதை எனது அம்மாவுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்,'' என்றார்.

சச்சின் பெற்ற விருதுகள்
சச்சினின் 24 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு சாதனைகள் படைத்தார். இவர் பெற்ற முக்கிய விருதுகள்.
ஆண்டு விருது
1994 அர்ஜுனா
1998 ராஜிவ் கேல் ரத்னா
1999 பத்மஸ்ரீ
2008 பத்ம விபூஷண்
2010 குரூப் கேப்டன் (இந்திய விமானப்படை)
2012 "ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா'
* 2012 ல் காங்., சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

ன்றி:தினமலர் 

No comments:

Post a Comment